/* */

குமாரபாளையம் வட்டமலையில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்

குமாரபாளையம் வட்டமலையில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் வட்டமலையில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
X

குமாரபாளையம் வட்டமலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வேலாயுதசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பங்குனி உத்திர நாளையொட்டி குமாரபாளையம் அருகே பிரசித்தி பெற்ற வட்டமலை வேலாயுதசாமி திருகோவிலில், காவிரியில் இருந்து தீர்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகள், குமாரபாளையம் நகரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

தக்கார் மற்றும் செயல் அலுவலர் கஸ்தூரி உடனிருந்து பூஜை பணிகள் மேற்பார்வையிட்டார். விழாக்குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் பச்சை வேட்டி அணிந்து பக்தர்களுக்கு கோவிலில், அன்னதான கூடத்தில் சேவை செய்தனர். சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யபட்டிருந்தன. சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 18 March 2022 12:19 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  6. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  8. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!