/* */

குமாரபாளையம் அருகே 14வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை : 11 பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை

குமாரபாளையம் அருகே 14வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 12பேரில் 11பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே 14வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை : 11 பேரிடம் போலீசார்  ரகசிய விசாரணை
X

குமாரபாளையம் அருகே 14வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 12பேரில் 11பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14வயது சிறுமிக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அவரது மூத்த 2 சகோதரிகளுக்கு திருமணம் நடந்து விட்டது. இந்த நிலையில் 6ம் வகுப்பு வரை படித்து விட்டு அந்த 14வயது சிறுமி தனது அக்கா வீட்டில் தங்கியிருந்தார். சிறுமி வீட்டில் இருந்த போது 3வது அக்காவின் கணவர் சின்ராஜ் என்பவர் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதனை அறிந்த சின்ராஜின் நண்பர்கள் எம்ஜிஆர் நகரை சேர்ந்த குமார், வடிவேல், சுந்தரம் உள்ளிட்டவர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை அந்த வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட பன்னீர், மூர்த்தி, கண்ணன், அபி, கோபி,நாய் சேகர், சங்கர், சரவணன் ஆகியோர் தொடர்ந்து மிரட்டி உறவு வைத்துள்ளனர். இது குறித்து பெற்றோரிடம் சிறுமி கூறியதை அடுத்து, கடந்த பிப்ரவரி 19ம் தேதி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப் பிரியாவிடம் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், குழந்தைகள் அலுவலர் ரஞ்சிதப்பிரியா, இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இது குறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி, பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரில் 11 பேரை கைது செய்து திருச்செங்கோடு புறநகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார். தலைமறைவான ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குமாரபாளையத்தில் 14வயது சிறுமிக்கு நிகழ்ந்துள்ள பாலியல் கொடுமை மாவட்டம் முழுவதும் மட்டுமல்ல தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Updated On: 13 April 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...