/* */

குமாரபாளையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவப்பரிசோதனை

குமாரபாளையத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், காசநோய் பிரிவு மாவட்ட உதவி இயக்குனர் டாக்டர் கணபதி வழிகாட்டுதல்படி, குமாரபாளையம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவக்குழுவினர், பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். மாவட்ட காசநோய் பிரிவு நலகல்வியாளர் இராமச்சந்திரன், காசநோய் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

இந்த முகாமில் 126 பணியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதில் டாக்டர் கிருத்திகா, சுகாதாரத்துறையினர் கார்த்திகேயன், அருள்மணி, முரளிதரன், உள்பட பலர் பங்கேற்றனர். இம்முகாமினை, சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், சவுந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்தனர்.

Updated On: 20 Oct 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  2. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  3. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  4. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  5. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  6. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  7. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  9. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  10. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!