/* */

சாய ஆலையில் மரம் வெட்டும் தொழிலாளி பலி

சாய ஆலையில் புகை போக்கி உடைந்து விழுந்த சம்பவத்தில் மரம் வெட்டும் தொழிலாளி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சாய ஆலையில்  மரம் வெட்டும் தொழிலாளி பலி
X

பலியான மாரியப்பன்.

சேலம் மாவட்டம், தேவூர் அருகே செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 50, மரம் வெட்டும் தொழிலாளி. இவர் டிராக்டர் உதவியுடன் பெரிய மரங்களை வெட்டி கொடுக்கும் பணியை பல சாயப்பட்டறைகளுக்கு செய்து கொடுத்து வந்தார். நேற்று குமாரபாளையம் பவர் ஹவுஸ் எதிரில், ராயல் ப்ராசஸ் எனும் சாய ஆலையில் டிராக்டர் உதவியுடன் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை தாங்காமல் அங்கிருந்த உயரமான புகை போக்கி உடைந்து, மாரியப்பன் தலைமேல் விழுந்தது. இதனால் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் இவர் பலியானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  2. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  3. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  5. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  6. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  7. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  10. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்