/* */

ஊரடங்கு அறிவிப்பால் தவிக்கும் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள்

பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் ஊரடங்கு அறிவிப்பால் வேலையின்றி வருமானத்துக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஊரடங்கு அறிவிப்பால்  தவிக்கும் விசைத்தறி தொழிலாளர் குடும்பங்கள்
X

ஊரடங்கு அறிவிப்பால் பள்ளிபாளையத்தில் ஓடாமல் கிடக்கும் தறிக்கூடம் 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2ம் அலை மிக வேகமாக பரவி வருவதால் அதை தடுக்கும் முயற்சியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள் அதிகாலை 4.00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அதே நேரத்தில் விசைத்தறிகள் இயக்கக் கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வந்த ஏராளமான விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டு இரண்டு வாரங்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த காலங்களில் முழு ஊரடங்கால் விசைத்தறி தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு தற்போது சீரடைந்து வந்த நிலையில் மீண்டும் தறி பட்டறைகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் விசைத்தறி கூலி தொழிலாளர்கள் வருமானத்துக்கு வழியின்றி விழி பிதுங்கி உள்ளனர்.

மேலும் வர்த்தக வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் வேறு வேலை வாய்ப்பு இன்றி வருமானமின்றி வறுமையில் தவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு ஏதேனும் நிவாரணத் தொகை அல்லது ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 May 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!