அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குமாரபாளையம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
HIGHLIGHTS
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1987 88 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்தார்கள். இவர்கள் 35 ஆண்டுக்கு பிறகு பள்ளிக்கு வந்து, அவர்களின் பள்ளி பருவத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை நினைவு கூர்ந்தார்கள். இன்றைய சூழ்நிலைகளை பற்றியும், ஒவ்வொருவரும் செய்யும் பணிகள், தொழில்கள், குடும்ப நிலைகள் பற்றியும் கலந்துரையாடி அறிமுகம் செய்து கொண்டார்கள். இவர்கள் அனைவரையும் இவர்களுடன் பயின்ற ராஜேந்திரன் ஒருங்கிணைத்தார்.
அப்போது பயின்ற 70 மாணவர்களில் 55 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் நலனுக்காகவும் பல்வேறு உதவிகளை இனிவரும் காலங்களில் செய்து தருவதாக உறுதி எடுத்துக் கொண்டார்கள். இவர்களை பள்ளியின் சார்பாக ஆசிரியர்கள் கார்த்தி, ராமச்சந்திரன், சிவகுமார், தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது அவ்வப்போது நடக்கும் என்பதும், முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு இந்த சந்திப்பு நல்வாய்ப்பாக அமைந்தது என இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.