/* */

நூதன முறையில் லாட்டரி விற்பனை: 2 மொபைல் போன்கள் பறிமுதல்; ஒருவர் கைது

குமாரபாளையத்தில் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 செல்போனை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நூதன முறையில் லாட்டரி விற்பனை:  2 மொபைல் போன்கள் பறிமுதல்;  ஒருவர் கைது
X
பைல் படம்.

மொபைல் போன்களில் எண்களை காட்டி நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் நேற்று மாலை 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி மற்றும் போலீசார் நேரில் சென்றபோது, அங்கு ஒருவர் மொபைல் போன் காட்டியும், வெள்ளை பேப்பரில் சில எண்களை எழுதியும் பொதுமக்களிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு என்று கூறி விற்பனை செய்து வந்தார்.

அவரை கையும் களவுமாக பிடித்து அவரிடமிருந்து பட்டன் மொபைல் போன் ஒன்று, சாம்சங் மொபைல் ஒன்று, வெள்ளை பேப்பரில் மூன்று எண்கள் எழுதப்பட்ட வெள்ளை துண்டு சீட்டுக்கள் 4, ரொக்கம் ஆயிரத்து 900 ரூபாய் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் விசாரணையில் இவர் குள்ளங்காடு பகுதியை சேர்ந்த சுரேஸ், 35, என்பது தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இவரிடம் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 28 Nov 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?