/* */

J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி..!

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது.

HIGHLIGHTS

J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி..!
X

J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவுக்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவரும், J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியின் செயலாளருமான ஸ்ரீமதி. செந்தாமரை மற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமாரபாளையம் J.K.K.ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவரும், பள்ளியின் செயலாளருமான ஸ்ரீமதி. செந்தாமரை கலந்து கொண்டு 185 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி, செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோருக்கு J.K.K. ரங்கம்மாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Updated On: 4 Aug 2023 12:26 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி