/* */

'குடிக்காதிங்க அப்பா' என மகன் அட்வைஸ்: விரக்தியில் தந்தை தற்கொலை

குமாரபாளையத்தில், குடிக்காதீர்கள் என்று மகன் சொன்னதால், தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குடிக்காதிங்க அப்பா என மகன் அட்வைஸ்: விரக்தியில் தந்தை தற்கொலை
X

குமாரபாளையம் வாசுகி நகரில் வசிப்பவர் நந்தகுமார், 42. டிரைவர். இவருக்கு ஜானகி, 39, என்ற மனைவியும், ஆகாஷ், 22, கார்த்திகேஸ்வரன், 17, என்ற இரு மகன்கள் உள்ளனர். நந்தகுமார் குடிப்பழக்கம் உள்ளவர். நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில் வேலைக்கு செல்லாமல் குடித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அவரது இளையமகன், இப்படி செய்கிறீர்களே? என்று கேட்டுள்ளார். அதற்கு நந்தகுமார், தன்னை யாரும் கேட்கக்கூடாது என்று கூறியுள்ளார். இதுபற்றி, மாடியில் உள்ள தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு கீழே வந்த போது, பூஜை அறையில் நந்தகுமார் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதை பார்த்து, குடும்பத்தினர் பதறினர். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் சடலத்தை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, டாக்டர்கள் கூறினர். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...