/* */

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் முறை கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்
X

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் கலிக்கம் கண் சிகிச்சை முகாம் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இது பற்றி சித்தா டாக்டர் கார்த்தி கூறும்போது, உடம்பில் உள்ள நோய்களை மூலிகை சாற்றினை கண்கள் வழியாக ஊற்றி குணமாக்கும் சிகிச்சை முறை கலிக்கம் சிகிச்சை எனப்படும். இதனால் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்களில் நீர் வடிதல், புரை வளர்தல் சரி செய்தல், தலைவலி, வயிறு, பெண்களின் கர்ப்பபை பாதிப்புகள், தோல் வியாதி, நரம்பு பலகீனம், வயது முதிர்வின் நடுக்கம் சம்பந்தமான நோய்கள் சரி செய்யப்படும். மருந்து விடப்படும் நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. ஐ.ஒ.எல். லென்ஸ் வைத்திருக்கும் நபர்களும் இந்த மருந்தை விட்டுக்கொள்ளலாம். மருந்தை விட்டுக்கொள்வதில் கால நிர்ணயம் இல்லை என்றார்.சங்க செயலர் கார்த்தி சபரி, பொருளர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 15 May 2022 12:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!