/* */

குமாரபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் குமாரபாளையம் கரையோர பகுதி மக்களுக்கு தாசில்தார் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
X

குமாரபாளையத்தில் மைக் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, காவிரி கரையோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, காவிரி கரையோரப்பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர், பழைய பாலம் அருகில் அண்ணா நகர், கலைமகள் வீதி இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு குமாரபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார் மைக் மூலம் எச்சரிக்கை செய்தார்.

இந்த பகுதியில் உள்ள மக்களை தங்க வைக்க புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, கலைமகள் வீதி நகராட்சி நடராஜா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

Updated On: 15 Nov 2021 2:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!