/* */

குமாரபாளையம் அருகே சேதமடைந்த பாலம்; சீரமைக்கப்படாத அவலம்

குமாரபாளையம் அருகே, சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சேதமடைந்த பாலம்; சீரமைக்கப்படாத அவலம்
X

சேதமடைந்துள்ள, வீரப்பம்பாளையம் பகுதி வாய்க்கால் பாலம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் வாய்க்கால் பாலம் உள்ளது. இது, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது தற்போது மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த பாலமானது, 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கிறது; அதிக போக்குவரத்து மிகுந்ததாகவும் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் என பல தரப்பட்டவர்கள், இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பழுதாகியுள்ள இப்பாலம் உடைந்தால், பல கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்கள் கோரிக்கையாக உள்ளது. உடனடியாக, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!