/* */

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், நகர்நல மையத்துக்கு பூமி பூஜை

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் நகர்நல மைய பூமி பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், நகர்நல மையத்துக்கு பூமி பூஜை
X

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் நகர்நல மையம் பூமி பூஜை நடந்தது.

குமாரபாளையத்தில் தற்போதுள்ள தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடைகள் அமைக்கும் பணி துவங்கியது. மார்க்கெட் வளாகத்தில் பூமி பூஜை நகராட்சி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. சேர்மன் விஜய்கண்ணன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

பதினைந்தாவது மத்திய நிதி 2021-22ன் படி 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழைய காவேரி பாலம் அருகே நகர்நல மையம் அமைக்க பூஜை செய்யப்பட்டது. சேர்மன் விஜய்கண்ணன் பூமி பூஜை போட்டு கட்டுமான பணிகள் துவக்கி வைத்தார். பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், கோவிந்தராஜ், தர்மராஜன், கிருஷ்ணவேணி, கனகலட்சுமி, நந்தினிதேவி, பூங்கொடி, சியாமளா, சுமதி, மகேஸ்வரி, புஷ்பா, தீபா, பாண்டிசெல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 19 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!