/* */

கொரோனா தடுப்பூசி போட எலந்தகுட்டை மருத்துவமனையில் திரண்ட மக்கள்!

பள்ளிப்பாளையம் அருகே எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி போட எலந்தகுட்டை மருத்துவமனையில் திரண்ட மக்கள்!
X

எலந்தகுட்டை அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போட வந்தவர்களின் வாகனங்கள்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், தொற்று தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, பள்ளிப்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது. பள்ளிபாளையம் அடுத்த வெப்படை எலந்தகுட்டை அரசு மருத்துவமனையில், கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட வந்து, காத்திருந்தனர். இருந்தபோதிலும் பொது மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தடுப்பூசிகள் இல்லாததால், ஏராளமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாம் ஒன்றுக்கு 200 முதல் 250 தடுப்பூசிகள் வரை போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 May 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  2. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  4. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  5. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  6. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  7. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  8. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்