/* */

சபரிமலையில் இறந்த பக்தர்களின் உடலை சொந்த ஊரில் சேர்த்த ஐயப்பா சேவா சங்கம்

சபரிமலையில் இறந்த பக்தர்கள் இருவர் உடலை அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினர் அவர்களது சொந்த ஊருக்கு இலவச ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர்.

HIGHLIGHTS

சபரிமலையில் இறந்த பக்தர்களின் உடலை சொந்த ஊரில் சேர்த்த ஐயப்பா சேவா சங்கம்
X

சபரிமலை சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மாதேஸ்வரன்.

சபரிமலையில் இறந்த பக்தர்கள் இருவர் உடலை அகில பரத ஐயப்பா சேவா சங்கத்தினர் அவர்களது சொந்த ஊருக்கு ஐயப்பா சேவா சங்கம் இலவச ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர்.

குமாரபாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 48. எலக்ட்ரிசியன். இவர் 8வது ஆண்டாக சபரிமலை சென்றிருந்தார். நேற்றுமுன்தினம் பம்பையிலிருந்து சபரிமலை ஏறும் வழியில் சரங்குத்தி என்ற இடத்தில் மாரடைப்பால் இறந்தார்.

இதே போல் சிதம்பரத்தை சேர்ந்தவர் இளங்கோவன், 47. அரசு போக்குவரத்து கழகத்தில் தலைமை மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர் நேற்றுமுன்தினம் சபரிமலை சென்ற போது, அப்பாச்சி மேடு பகுதியில் மாரடைப்பால் இறந்தார்.

அகில பரத ஐயப்பா சேவா சங்கத்தினர் தூத்துக்குடியை சேர்ந்த கனகராஜ், விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் இருவரும் இருவரது உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் ஐயப்பா சேவா சங்கம் இலவச ஆம்புலன்ஸ் மூலம் ஏற்பாடு செய்தனர். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட அகிலபாரத ஐயப்பா சேவா சங்க செயலர் ஜெகதீஸ் தெரிவித்தார்.

Updated On: 14 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  2. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  3. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  4. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  5. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  7. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  8. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  9. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  10. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!