/* */

மனநலம் பாதித்தவர் தாக்குதலில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

பள்ளிபாளையத்தில், மன நலம் பாதித்தவர் தாக்கியதில் ஒருவர் பலியானார்; இன்னொருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

மனநலம் பாதித்தவர் தாக்குதலில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்
X

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில், முதியவர் ஒருவர் கல்லால் தாக்கிய நிலையில் இறந்து கிடந்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த இன்னொரு நபர் படுகாயமடைந்த நிலையில் இருந்தார். போலீசார் விசாரணையில் இறந்தவர் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த வேலப்பன்,75, என்பதும், படுகாயமடைந்தவர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, 65, என்பதும் தெரியவந்தது.

இருவரும், விசைத்தறி கூலித்தொழிலாளிகள். நேற்றுமுன்தினம் அதிகாலை 03:00 மணியளவில் டீ குடிக்க வந்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தை சேர்ந்த கோகுல்ராஜ், 23, என்பவர், இவர்களை கல்லால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், வேலப்பன் இறந்துவிட, பழனிச்சாமி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 8 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க