Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் அருகே வீட்டு முன் நிறுத்தி இருந்த டூ வீலர் திருட்டு
குமாரபாளையம் அருகே வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலர் திருடப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
HIGHLIGHTS
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் நாகராஜ் (வயது, 51.). விவசாயி. இவர் தனது பல்சர் டூவீலரை தன் வீட்டின் கீழ் பகுதியில், நிறுத்தி, சைடு லாக், சங்கிலி போட்டு பூட்டி வைத்து விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது வண்டியை காணவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.