/* */

ஜேஜேகே நடராஜா நினைவு இயக்கம் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா

ஜேஜேகே நடராஜா நினைவு இயக்கம் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜேகேகே நடராஜா நினைவு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்தவர்களுக்கு முதற்கட்டமாக 160 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜேகேகே நடராஜா நினைவு இயக்கம் மற்றும் சென்னை இந்தியா விஷன் இன்ஸ்டியூட் இணைந்து கடந்த ஜனவரி 28ம் தேதி மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் குமாரபாளையம் ஜேகேகே ரங்கம்மாள் ஆரம்பப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது .


இதனைத் தொடர்ந்து இன்று ஜேகேகே ரங்கம்மாள் பள்ளியில் கண் பரிசோதனை செய்து கொண்ட நபர்களுக்கு அவர்களது பார்வைத்திறனுக்கு ஏற்ப ஜேகேகே நடராஜா நினைவு இயக்கம் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா மற்றும் ஐஸ்வர்யா ஓம்சரவணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண் குறைபாடு உள்ள 160 பேருக்கு முதல் கட்டமாக பார்வை தெளிவு பெற இலவச கண் கண்ணாடி வழங்கி சிறப்பித்தனர். கண்ணாடிகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா மற்றும் ஐஸ்வர்யா ஓம்சரவணா ஆகிய இருவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

Updated On: 14 March 2021 4:22 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...