/* */

அனுமதியின்றி இயங்கி வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அனுமதியின்றி இயங்கி வந்த இரண்டு சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

அனுமதியின்றி இயங்கி வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் சாயசலவை ஆலைகள் கழிவு நீரை, சுத்திகரிப்பு செய்யமால் கழிவு நீரை வெளியேற்றி வரும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து சாயக் கழிவுநீர் கலந்து வருவதாக வந்த புகாரை அடுத்து இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் பள்ளிபாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது பள்ளிபாளையம் அருகே உள்ள ஆண்டிகாடு பகுதியில் 2 சாயப்பட்டறைகள் அனுமதியின்றி இயங்கி வருவதும் அதிலிருந்து சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நிறைவேற்றப் படுவதும் கண்டறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த இரு சாயப் பட்டறைகளையும் சுத்தியல் மற்றும் கடப்பாறைகளால் இடித்துத் தள்ளினர். இதையடுத்து இரவு நேரங்களில் நீர்நிலைகளில் சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 29 Jan 2021 5:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  3. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  4. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  5. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  7. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  8. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு