/* */

வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா

வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சி தலைவியின் கணவரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் தர்ணா
X

வண்டுவாஞ்சேரி ஊராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் தர்ணா செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை காவலராக பத்து பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்பொழுது ஆட்சி மாறியவுடன் வண்டுவாஞ்சேரி தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வியின் கணவர் குமார் என்பவர் துப்புரவு பணியாளர்களை பணி செய்ய விடாமல் குப்பை அள்ளும் வண்டியை பூட்டுப் போட்டு பூட்டி உள்ளாராம்.

குப்பை அள்ளும் வண்டியை பூட்டு போட்டு போட்டு பூட்டியதால் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் வேலை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆகையால் கடந்த 2 தினங்களாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக துப்புரவு பணியாளர் சுப்பிரமணியன் என்பவர் கூறும்போது தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் தங்களை தரக்குறைவாக பேசுவதாகும், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.


Updated On: 13 Oct 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்