Begin typing your search above and press return to search.
வேதாரண்யத்தில் மறைந்த முப்படை தளபதிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் அஞ்சலி
முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னெடுத்துச் சென்று அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
HIGHLIGHTS
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் ஊராட்சியில் மறைந்த இந்திய முப்படை தளபதி பிபின்ராவத் அவரது மனைவி மற்றும் அவரோடு பயணித்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னெடுத்துச் சென்று, பெரியவர்கள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நாட்டு பற்றோடு அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.