/* */

நாகப்பட்டினம் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தமிழக சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் என்ற ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துஆய்வு செய்தார் அதனைத்தொடர்ந்து திட்டச்சேரிபேரூராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்ட அமைச்சர் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் இருக்கை நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவையான தடுப்பூசி கையிருப்பு உள்ளதாகவும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்று வருவதாகவும்,

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேவைக்கு ஏற்ப கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

மேலும் மாவட்டத்தில் வாய்ப்பு உள்ள இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றார். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கொரோனா தடுப்பு பணியில் புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியில் உள்ள நடைமுறைகள் மாற்றப்பட்டு எதிர்க் கட்சி மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுக்கப்படுகிறது எனவும்,

பேரிடர் காலத்தில் அரசுடன் சேர்ந்து பயணிப்பது அவர்களின் கடமை எனவும், எங்களுடன் சேர்ந்து வந்தால் பயணிக்க தயார் என்று தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் பேரிடர் காலத்தில் மக்களுக்கு செய்யும் பணிகளை ஆளுங்கட்சி தடுக்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Updated On: 27 May 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!