/* */

நாகை மீனவர்கள் குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

நடுக்கடலில் மாயமான நாகை மீனவர்கள் குடுமபத்துக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆறுதல் கூறினார்.

HIGHLIGHTS

நாகை மீனவர்கள் குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்
X

நாகை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கேரளா அருகே டவ்தே புயலில் நடுக்கடலில் படகு விபத்துக்குள்ளாகி மாயமானார்கள். மீனவர்கள் இதுவரை மீட்கபடாத காரணத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அதிமுக சார்பாக பாதிக்கபட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார். பின்னர் பேசிய முன்னால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ; நடுக் கடலில் காணாமல் போன நாகை மீனவர்களை தேடும் பணியில் மத்திய அரசு நேரடியாக ஈடுபட வேண்டும் எனவும், மீனவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தாலும், தீவிர முயற்சி எடுக்க வேண்டும் எனவும், காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கான பணிகளை பிரதமர் மோடி முடுக்கிவிட வேண்டும் என்றார்.

மேலும் மத்திய அரசு முழுவீச்சில் வான்வெளி தேடுதலையும், கடல்வழித் தடங்களையும், ரேடர் போன்ற அதி நவீன கருவரிகள் வசதிகளையும், விஞ்ஞானதொழில் நுட்பத்தையும் பயன்படுத்திய மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

Updated On: 19 May 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு