Begin typing your search above and press return to search.
சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் பிரதோஷ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.
HIGHLIGHTS
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாதசிவன் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் சுவாமி,பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலை வலம் வந்தனர்.
அர்ச்சகர்கள் ரவி,பரசுராம், ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.விழா ஏற்பாடுகளை தக்கார் இளமதி,எம்.வி.எம் குழுமத் தலைவர் மணி முத்தையா,தொழிலதிபர் வள்ளி மயில், பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் பூபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.