/* */

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது
X

மதுரையில் ரயில்வே பொருட்களை திருடியவர்களுடன் அவர்களை கைது செய்த போலீசார்.

மதுரை கோட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறை குழாய்களை திருடி விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழாய்களை திருடி விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை கோட்டத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அவ்வப்போது மாயமாகுவதாகவும் இதன் காரணமாக கழிவறையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாக தொடர்ந்து, பயணிகள் புகார் தெரிவித்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் ரயில் பெட்டியில் உள்ள கழிவறைகளில் குழாய்களை மட்டும் திருடி செல்வது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் ,இது தொடர்பாக ரயில் பயணத்தின் போது காவல் துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் பையில் இரும்பு பொருட்களுடன் ரயில் நிலையத்துக்குள் சுற்றித்திரிந்த மதுரை கோ புதூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

மது அருந்ததற்காக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 15-க்கும் மேற்பட்ட ரயில்களின் கழிவறையில் உள்ள குழாய்களை மட்டும் கழட்டி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டு பொருட்களை வாங்கிய கடை உரிமையாளர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 14 April 2024 8:13 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி