/* */

விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை கண்ணாடி சேதம்

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை கண்ணாடி சேதம்
X

மதுரை சம்மட்டிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் வயது 17. இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சக மாணவர் ஒருவரும் காலை கல்லூரிக்கு செல்வதற்காக அச்சம்பத்து வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத மூலமாக விபத்தில் சிக்கினார்கள். விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்களையும் 108 அவசர கால உறுதி மூலமாக மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சையில், இருந்த மாணவன் ஹரிஹரன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழக்கவே, தகவல் அறிந்த சக மாணவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் குவிந்த சக மாணவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் மாணவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் தள்ளுமுள்ளு ஏற்படவே, அதில் முகப்பு கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விரைந்து வந்து சக மாணவர்களை சமாதானப்படுத்தி இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாலேயே உயிரிழந்ததாக உறவினர்களும் சக மாணவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்தனர் . உரிய முறையில் விசாரணை நடத்தி தவறு இருக்கு பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்து அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

சுமார் 2 மணி நேரம் பைபாஸ் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 March 2024 8:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்