/* */

திருமங்கலம் நகராட்சி சேர்மன் தேர்தல் ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தலைவர் தேர்ந்தக்க கவுன்சிலர்கள் வர மறுப்பு.

HIGHLIGHTS

திருமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக 18 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் தேமுதிக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இதில் தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நகர்மன்ற தலைவருக்கான திமுக வேட்பாளராக ரம்யா முத்துக்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதே சமயத்தில் திருமங்கலம் நகர செயலாளர் முருகன் தனது மருமகள் ஷர்மிளாவை தலைமையை எதிர்த்து தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தனது ஆதரவாளர்களான 12 உறுப்பினர்களுடன் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் ரம்யா முத்துக்குமார் தரப்பினர் மற்றும் அதிமுக வார்டு உறுப்பினர்கள் என 14 பேர் இந்த தேர்தலை புறக்கணித்தனர். இதையடுத்து போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தலைவர் மறைமுக தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனை நகராட்சி ஆணையர் டெரன்ஸ் லியோன் அறிவித்தார்.

Updated On: 4 March 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’