/* */

மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை அருகே அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம்
X

அவனியாபுரம் பால மீனாட்சி கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை அவனியாபுரம் மீனாட்சியம்மன் கோயில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை அருகே உள்ள அவனியாபுரத்தில், ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருக்கல்யாண விழா சிறப்பு வாய்ந்தது.

புராணங்களில் மீனாட்சி குழந்தையாக இருக்கும்போது விளையாடிய திருத்தலமாக இது கருதப்படுகிறது. சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் திருவிழாவைப் போல், அவனியாபுரம் பால மீனாம்பிகை திருக்கோயிலும் கொடியேற்றத்துடன் திக்விஜயம் ,திருக்கல்யாணம் பூப்பல்லாக்கு போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதனையொட்டி, இன்று காலை எட்டு நாற்பது மணியளவில் பால மீனாம்பிகை- கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

கோவில் குருக்கள் நாகசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் இணைந்து திருக்கல்யாண வைபோகத்தை நடத்தி வைத்தனர். கோவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், ஹிந்து அறநிலைய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், திருக்கல்யாண வடிவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் திருக்கல்யாண மொய் எழுதினர்.

Updated On: 22 April 2024 8:17 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்