Begin typing your search above and press return to search.
திருப்பரங்குன்றத்தில் கந்துவட்டி ஜவுளி கடைக்காரர் கைது: போலீசார் அதிரடி
திருப்பரங்குன்றம் பகுதியில் கந்துவட்டி ஜவுளி கடை காரர் அதிகமாக வட்டி கேட்டு தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
மதுரை, திருப்பரங்குன்றம் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகன் வயது 48 இவர்குடும்ப கஷ்டத்திற்க்கு பெரிய கடை வீதியில் ஜவுளி கடை நடத்தி நடத்தி வரும் பாலசுப்பிரமணி என்பவரிடம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.
இவர் வாங்கிய கடனுக்கு முறையாக வட்டி செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டி முருகனை அரிவாளால் பாலசுப்பிரமணியன் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து முருகன் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் பாலசுப்ரமணியன் மீது வழக்கு பதிவு செய்து கந்துவட்டி சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியன் கைது செய்தனர்.