/* */

மதுரை அருகே போலீஸாரைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்

காவல்துறையைக் கண்டித்து சிலைமான் காவல்நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

மதுரை அருகே போலீஸாரைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
X

மதுரை அருகே சிலைமான் காவல்நிலைய காவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை அவதூறாக பேசியதாக சிலைமான் காவலரைக் கண்டித்து காவல் நிலையம் அருகே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, சிலைமான் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, குற்றச்செயல்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து குறைகளை எடுத்து கூறினர்.

இது சம்பந்தமாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிலைமான் காவல் ஆய்வாளரை சந்திக்கச் சென்றபோது,காவல் நிலையத்தில் இருந்த காவலர் மீனாட்சிசுந்தரம் என்பவர், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை வரம்புமீறி தரைகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ‌ இதைக்கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்டத்தின் சார்பாக ஜனநாயக முறையில், மதுரை சிலைமான் காவல் நிலையத்திற்கு முன்பாக கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். காவல் நிலைத்தில் காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் செய்ததால், இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Updated On: 26 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்