/* */

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை தேவை

அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் வலியுறுத்தல்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை தேவை
X

விவசாயிகள் கோரிக்கை ஏற்று அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு இயக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எழுதிய கடிதத்தில் கூறியதாவது:மதுரை மாவட்டம் , அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திண்டுக்கல் , மதுரை , விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பை அரவைக்கு அனுப்புகின்றனர் .கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு எங்களுடைய முயற்சியால் ரூ 22 கோடி வரை வழங்கப்பட்டது . அதே போல், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்கு ஒதுக்கீடாக ரூ. 6 கோடி வழங்கப்பட்டது .

கொரோனா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் அரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டது . தற்போது, 60,000 மெட்ரிக் டன் பதிவு செய்யப்பட்டுள்ளதால் 2022 - ம் ஆண்டு அலங்காநல்லுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவை உடனடியாக தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போரட்டம் நடத்தி வருகின்றனர் .

தற்போது, 2 ஆயிரம் ஏக்கர் கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் 1.50 லட்சம் டன் கரும்பு அறுவடைக்குத்தயாராக உள்ள நிலையில் அந்த கரும்பும் தற்போதைய சூழலில், அலங்காநல்லுார் கொண்டு வரவே அதிக வாய்ப்பு உள்ளது .அரைவை தொடங்காததால் ஆலை உபமின் நிலையம் செயல்படாமல் உள்ளது . இதனால் அரசுக்கு ரூ .110 கோடிக்குமேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கரும்பு விவசயாய சங்கத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து,முன்னாள் முதலமைச்சர்கள் ஒ.பி.எஸ் , இபிஎஸ் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் . எனவே,அரசு சார்பில் இந்த ஆண்டு ஆலையை இயக்கட தேவையான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 16 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்