/* */

சோழவந்தான் திரவுபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா

மதுரையை அடுத்த சோழவந்தான் திரவுபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தான் திரவுபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா
X

சோழவந்தான் திரவுபதியம்மன் கோவில் நடைபெற்ற வருடாபிஷேக விழா.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் திரவுபதியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பரம்பரை பூசாரிகள் அர்ஜுனன், திருப்பதி, ஜவர்கலால் ,குப்புசாமி, ஆதி பெருமாள் ஆகியோர் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். திரவுபதியம்மனுக்கு திருமஞ்சனம், பால், பன்னீர் உட்பட 12 அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இக்கோவிலில் உள்ள விநாயகர், கருப்புசாமி, அகோர வீரபத்திரர், நாககன்னி, கமலக்கண்ணி, சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பூஜைகளுக்குப்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பரம்பரை பூசாரிகள் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் வருடாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பரம்பரை பூசாரி மற்றும் கோவிலைச் சேர்ந்த குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Feb 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?