/* */

மதுரை அருகே போலி பீடி தயாரித்து விற்றவர் கைது

பல்வேறு நிறுவனங்களில் பெயரில் போலியாக தயாரித்த பொருட்களை கைப்பற்றி ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

மதுரை அருகே போலி பீடி தயாரித்து விற்றவர் கைது
X

மதுரை அருகே அலங்காநல்லூரில், போலி பீடி பண்டல்கள் பறிமுதல்.

மதுரையில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடி தயாரித்து விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்த பண்டல்கள், பண்டலாக போலி பீடிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு, சிக்கந்தர் சாவடி பகுதிகளில் பிரபல செய்யது பீடி, நிறுவனத்தின் பெயரில், போலியாக லேபில், பீடி தயாரித்து குறைந்த விலையில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக செய்யது பீடி நிறுவன மேலாளர் முகம்மது அப்துல்லா, அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகளில் போலி பீடி பண்டல்களை விற்பனை செய்யவந்த நபரை செய்யது பீடி நிறுவன ஊழியர்கள் மடக்கிபிடித்து அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலி பீடி பண்டல்களை விற்பனை செய்தது

பிடிபட்ட நபர் மதுரை ஆனையூரை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து பண்டல் பண்டலாக பீடிகள், டி.எஸ். பட்டணம் பொடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பெயரில் போலியாக தயாரித்த பொருட்களை கைப்பற்றி ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Aug 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...