/* */

அலங்காநல்லூர் அருகே கிணற்றிலிருந்து 3 சடலம் மீட்பு: ஒருவர்மருத்துவமனையில் அனுமதி

கடன் பிரச்னையால் மனம் வெறுத்துப்போன முருகன், தனது மனைவி உள்பட இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டுள்ளார்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே கிணற்றிலிருந்து 3 சடலம் மீட்பு: ஒருவர்மருத்துவமனையில் அனுமதி
X

முருகன் மற்றும் அவரது  மனைவி சுரேகா

அலங்காநல்லூர் அருகே பிளஸ் 1 மாணவி , தாய், மகன் உள்பட 3 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். ஒருவர் மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டார்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய இலந்தைகுளத்தை சேர்ந்த முருகன்( 39 ). இவர், குலமங்கலம் அருகே பொம்ம தேவன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், கொய்யா மரம் குத்தகைக்கு எடுத்து அங்கு குடும்பத்துடன் தங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஊரில் கடன் ஏற்பட்டதால் கொய்யா குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து கடனை அடைத்துவிடலாம் என இருந்த போது, அங்கும் கடன் அதிகமானதால் மனைவி சுரேகா( 36.), மகள் யோகிதா( 16.) இவர் மதுரையில் பிளஸ்- 1 படித்து வருகிறார். மகன் மோகனன்( 11.) இவர் ,பாலமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தொடர்ந்து, கடன் பிரச்னையால் மனம் வெறுத்துப்போன முருகன் , தனது மனைவி உள்பட இரு குழந்தைகளையும் பொம்மதேவனுக்கு சொந்தமான கிணற்றில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.



அவர்கள் மூவரும் உயிரிழந்த நிலையில் முருகன் மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ,மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இறந்த 3 பேரையும் அலங்காநல்லூர் போலீசார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்ப வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள். மேலும், கடன் பிரச்னையாக. இல்லை வேறு பிரச்னையா என்பது தெரியவரும் இச்சம்பவம் கள்ளி வேலி பட்டி மற்றும் பெரிய இலந்தைகுளம் கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியது.

Updated On: 18 Aug 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...