/* */

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை.

முகநூலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக பதிவிட்ட வழக்கில் மதுரையில் என்ஐஏ அதிரடி சோதனை.

HIGHLIGHTS

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை.
X

'காஜிமார் தெருவில் தூங்கா விழிகள் ரெண்டு' என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஐஎஸ்எஸ் உள்ளிட்ட அடிப்படை பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், மத நல்லிணக்கத்துக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும் மதுரையை சேர்ந்த முகமது இக்பால் என்பவருக்கு எதிராக தமிழக காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

மேலும் இக்பால், கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலானாய்வு முகமைக்கு நேற்று மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, மதுரையில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். காஜிமார் தெரு, கே. புதூர், பெத்தானியாபுரம், மெகபூப்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், லேப்டாப், மொபைல் போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ், புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Updated On: 16 May 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது