/* */

ஜாதி மோதலை உண்டாக்க விசிக நினைக்கிறது -எல்.முருகன்

ஜாதி மோதலை உண்டாக்க விசிக நினைக்கிறது -எல்.முருகன்
X

அரக்கோணம் விவகாரத்தை முன் வைத்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழகத்தில் ஜாதி மோதலை உண்டாக்க நினைக்கிறது என மதுரையில் பாஜக மாநில தலைவர் முருகன் குற்றம் சாட்டினார்.

மதுரை அவுட் போஸ்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இதை கண்டிக்கும் விதமாக மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து எல்.முருகன் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறுகையில் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது, பாஜக அரசு அம்பேத்கரை பெருமைபடுத்தியுள்ளது, அம்பேத்கர் சாதி தலைவர் அல்ல.

திருமாவளவன் ஜாதி அரசியலை கையில் எடுத்து உள்ளார், அரக்கோணம் இரட்டை கொலை இரண்டு நண்பர்களுக்கு இடையிலான மோதலாகும், அரக்கோணம் விவகாரத்தை வைத்து விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தமிழகத்தில் ஜாதி மோதலை உண்டாக்குவதே நோக்கமாக வைத்துள்ளது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது என கூறினார்.

Updated On: 16 April 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!