Begin typing your search above and press return to search.
கள்ளழகர் கோயில் உண்டியல் திறப்பு
பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு இன்று எண்ணப்பட்டன.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு இன்று எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 31,54,339 ரூபாயும், 96 கிராம் 730 மில்லி தங்கம், 524 கிராம் வெள்ளிபொருட்கள் கிடைக்கப்பெற்றன. கோயில் உதவி ஆணையர் அனிதா தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் உண்டியல் பணம் எண்ணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.