/* */

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இனிப்பு-பலகாரம் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து

மதுரை ஜெய்ஹிந்த்புரம் 13 வது தெருவில் உள்ள ஸ்வீட் கடையில் ஏற்பட்ட தீயை விரைந்து அணைத்ததால் பெரும் சேதம் தவிர்ப்பு

HIGHLIGHTS

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இனிப்பு-பலகாரம் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
X

மதுரையில் உள்ள ஸ்வீட் கடையில் திடீரென நேரிட்ட தீயை விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு 13வது குறுக்கு தெருவில் பாக்யராஜ் இனிப்பு பலகாரங்கள் தயாரிக்கும் கடையை நடத்தி வந்தார். இங்கு தயாரிக்கும் இனிப்பு கார வகைகள் கடைகளுக்கு நேரில் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை நான்கு முப்பது மணி இந்த கடையிலிருந்து புகை வெளியேறுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அறிந்த மதுரை மாவட்ட உதவி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து மதுரை ஜெயந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 19 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு