/* */

போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழப்பு: மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

HIGHLIGHTS

போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழப்பு: மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
X

பைல் படம்.

மதுரையில் போலீசார் தாக்கியதில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் சரவணக்குமார் விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாக கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஒத்தக்கடை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர் .

பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் எனது மகனை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிப்ரவரி 23ஆம் தேதி சரவணகுமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணகுமார் அடுத்தநாளே உயிரிழந்தார் .

இந்நிலையில் போலீசார் தாக்கியதே அவரது உயிரிழப்புக்கு காரணம் எனவே சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துறை, ஜெயச்சந்திரன் போலீசார் மனித உரிமை மீறல் செயலுக்காக சரவணகுமாரின் மனைவி கலைவாணிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக ஒரு மாத காலத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் உதவி ஆய்வாளர் காஞ்சனா தேவி ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பரிந்துரை செய்துள்ளார்.

Updated On: 10 Dec 2021 3:57 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்