/* */

மதுரையில் பெண்களிடம் நகைகளை பறித்த நான்கு பேர் கைது

மதுரை மாநகரில் 13 இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நகைகள் மீட்கப்பட்டன

HIGHLIGHTS

மதுரையில் பெண்களிடம் நகைகளை பறித்த நான்கு பேர் கைது
X

நகை பறிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்

மதுரை மாநகரில் தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, எஸ்.எஸ் காலனி, அண்ணாநகர், கீரைத்துறை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களிடம் நகைபறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதுபோன்ற வழிப்பறிச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறிவதற்காகவும் ,மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (குற்றம்) இராஜசேகர் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

குற்றச்சம்பவங்களில், ஈடுபட்ட குற்றவாளிகளை சிசிடிவி,கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்த போது, குற்றவாளிகள் மணி (எ) வைரமணி, மதன்குமார், சிவா மற்றும் விஜய் ஆகியோர் என தெரியவந்ததது. இவர்கள், மதுரை மாநகரில் 13 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களிலும், சமயநல்லூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு செயின் பறிப்பு சம்பவங்களிலும், இரண்டு வாகன திருட்டிலும் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 44 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 90 சவரன் தங்க நகைகள் மற்றும் வழிப்பறி சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. அவர்களை கண்டறிய சிசிடிவி, கேமராக்களின் பதிவுகள் உறுதுணையாக இருந்தது.

மேலும் , பொது இடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Updated On: 17 Oct 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்