/* */

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
X

மதுரையில் மகளை கடத்தி சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரது 2வது மகள் நிவேதா (26). இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் செந்தூர் என்பவர் நிவேதாவுக்கு ஆசை வார்த்தை கூறி நிவேதாவை மயக்கிய நிலையில் கடந்த 10 தினங்களுக்கு வீட்டை விட்டு பணிக்கு சென்றவர் காணவில்லை என்று கூறப்படுகிறது.தொடர்ந்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர் செந்தூர் தான் நிவேதாவை கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் நிவேதாவின் குடும்பத்தார் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் லட்சுமி தனது குடும்பத்தாருடன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மண்ணெண்ணெயை தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் மனுவை கலெக்டரிடம் வழங்க அறிவுறுத்தி பின்னர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Updated On: 22 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?