/* */

4 ஆண்டுகளுக்குப் பின் மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

வடகிழக்கு பருவமழை காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

4 ஆண்டுகளுக்குப் பின் மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
X

மாரசந்திரம் தடுப்பணை.

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா, ஆந்திர மாநிலத்திலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டியது இதனால் மார்க்கண்டேயன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில எல்லைப் பகுதியான முத்தியால்மடுகு என்ற மலைப் பகுதியில் வெளியேறும், சிறுசிறு ஒடைகள் மூலம் உருவாகும் மார்கண்டேயன் நதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்த்தம், பாலனப்பள்ளி, சிக்கரிப்பள்ளி வழியாக மாரசந்திரம் தடுப்பணையை வந்தடைகிறது.

மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் மார்கண்டேயன் நதி, இடது புற கால்வாய் வழியாக ஜீனூர், திப்பனப்பள்ளி, குந்தாரப்பள்ளி, சாமந்த மலை வழியாக கிருஷ்ணகிரி படேதலாவ் ஏரியை வந்தடைகிறது. இந்த மார்கண்டேயன் நதி மூலம் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாசனவசதி பெருகிறது.

4 ஆண்டுகளாக மார்கண்டேயன் நதி வறண்டு கிடந்தாதால் வேப்பனஹள்ளி சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழ் சென்றது. இதனால் தண்ணீர் பஞ்சத்தால் கிராம மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்கண்டேயன் நதியில் ஏற்பட்டுள்ள நீர் வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 28 Nov 2021 6:39 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  4. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  6. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  7. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  8. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...