/* */

ஊத்தங்கரை பகுதிகளில் வேகமாக பரவும் கோமாரி நோய்: ஏராளமான மாடுகள் சாவு

ஊத்தங்கரை ஒன்றியத்தில் வேகமாக பரவும் கோமாரி நோயால் ஏராளமான மாடுகள் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஊத்தங்கரை பகுதிகளில் வேகமாக பரவும் கோமாரி நோய்: ஏராளமான மாடுகள் சாவு
X
பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோயால் ஏராளமான கால்நடைகள் பலியாகியுள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வீராட்சி குப்பம் ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பசுமாடுகள் பலியாகியுள்ளது விவசாயிகள் வேதனை அடையச் செய்துள்ளது. வீராட்சி குப்பம். ஊராட்சிக்குட்பட்ட ஓபுளிநாயக்கன்பட்டி, தாதி நாயக்கன்பட்டி, கருவானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார்கள்.

அடை மழையின் காரணமாக தற்பொழுது இந்தப் பகுதியில் பசு மாடுகளை கோமாரி நோய் அதிக அளவில் தாக்கி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பசுமாடுகள் கால்களில் புண்கள் ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாத நிலை உள்ளது. இதனால் பால் அளவு குறைந்துள்ளது.

இதேபோல் மடிநோயால் அவதிப்படும் பசுமாடுகள் பால் சுரக்க முடியாத நிலை உள்ளது. ஊத்தங்கரை ஒன்றியத்தில் நொச்சிப்பட்டி, மண்ணாடிப்பட்டி , மூங்கிலேரி, சத்திரப்பட்டி என பல்வேறு கிராமங்களில் கோமாரி நோயால் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏராளமான பசுமாடுகள் இறந்துள்ளது.

எனவே ஊத்தங்கரை மற்றும் மத்தூர் ஒன்றியங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் கால்நடை மருத்துவ முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 Dec 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை