/* */

விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம்: வனத்துறையினர் விரட்டியடிப்பு

விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகள் கூட்டம் : பட்டாசுகள் வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர்.

HIGHLIGHTS

விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகள் அட்டகாசம்: வனத்துறையினர் விரட்டியடிப்பு
X

தேன்கனிகோட்டை அருகே விவசாய நிலங்களில் சுற்றிதிரியும் யானை கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள மரக்கட்டா வனப்பகுதியிலிருந்து நேற்று நள்ளிரவு வெளியேறிய 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் பல்வேறு கிராமப் பகுதிகளின் வழியாக சென்று இன்று காலை அந்தேவணப்பள்ளி கிராமத்தின் அருகிலுள்ள பெரிய ஏரி பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது.

காட்டுயானைகளை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் கூட்டத்தை பட்டாசுகள் வெடித்து விரட்டினர்.

ஆனாலும் யானைகள் அதேபகுதியில் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்துள்ளது. தொடர்ந்து அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டுயானைகள் அனைத்தும் முகாமிட்டுள்ளது. இந்த யானைகளை இரவு நேரத்தில் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து அந்த காட்டு யானைகளை கண்காணித்தும் வருகின்றனர்.

அந்தேவனப்பள்ளி கிராமப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் அந்தேவணபள்ளி, கங்கதேவனப்பள்ளி, முனுகனப்பள்ளி, தொட்டூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 15 Nov 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்