/* */

பணத்தை திருப்பி கேட்ட வேன் டிரைவருக்கு அடி, உதை : ஒருவர் கைது

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேன் டிரைவரை தாக்கிய தனியார் கம்பெனி ஊழியர் கைது

HIGHLIGHTS

பணத்தை திருப்பி கேட்ட வேன் டிரைவருக்கு அடி, உதை : ஒருவர் கைது
X

கிருஷ்ணகிரி மாவட்டம்,கெலமங்கலம் அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேன் டிரைவரை சரிமாரியாக தாக்கிய தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்தவர் சரவணன், வேன் டிரைவர். இவரிடம் அதே பதியில் உள்ள துளசி நகரை சேர்ந்த தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரியும் நந்தீஸ்குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

ஆனால் பலமுறை கேட்டும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பணம் கொடுக்க மறுத்ததுடன், ஆபாச வார்த்தையால் பேசி, அங்கிருந்த மரக்கட்டையால் சரவணனை, நந்தீஸ்குமார் மற்றும் அவரது நண்பரான அண்ணா நகரை சேர்ந்த அஜீத் ஆகியோர் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைநத சரவணன், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸ் எஸ்.ஐ பார்த்தீபன் வழக்கு பதிவு செய்து, நந்தீஸ்குமாரை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள அஜீத்தை தேடி வருகின்றனர்.

Updated On: 1 April 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்