/* */

தேன்கனிக்கோட்டை அருகே கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி: தப்பிய ரூ.2.5 கோடி

தேன்கனிக்கோட்டை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் ரூ.2.5 கோடி தப்பியது.

HIGHLIGHTS

தேன்கனிக்கோட்டை  அருகே கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி: தப்பிய ரூ.2.5 கோடி
X

கொள்ளை முயற்சி நடந்த கூட்டுறவு கடன் சங்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகேயுள்ள நொகனூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கூட்டுறவு கடன் சங்க வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னலை கம்பிகளை அறுத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் உள்ளிருந்த பணம் மற்றும் நகைகள் இருந்த இரும்பு பெட்டகத்தை கேஸ் வெல்டிங் செய்து உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அலாரம் ஒலி எழும்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் தப்பியது.

தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 8:54 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  7. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  8. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு