Begin typing your search above and press return to search.
தேன்கனிக்கோட்டை அருகே கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி: தப்பிய ரூ.2.5 கோடி
தேன்கனிக்கோட்டை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த கொள்ளை முயற்சியில் ரூ.2.5 கோடி தப்பியது.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகேயுள்ள நொகனூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கூட்டுறவு கடன் சங்க வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னலை கம்பிகளை அறுத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் உள்ளிருந்த பணம் மற்றும் நகைகள் இருந்த இரும்பு பெட்டகத்தை கேஸ் வெல்டிங் செய்து உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அலாரம் ஒலி எழும்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் தப்பியது.
தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.