Begin typing your search above and press return to search.
போச்சம்பள்ளி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
போச்சம்பள்ளி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசா்ர கைது செய்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் போச்சம்பள்ளி குருசாமி கொட்டாயில் உள்ள எதிரி வீட்டின் முன்பு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.300 ரொக்கத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.