Begin typing your search above and press return to search.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொமுச நிர்வாகிகள் பரமசிவம், ஜேக்கப்ராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏ.வும், தொமுச கவுரவத் தலைவருமான செங்குட்டுவன் பங்கேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.