/* */

இடுகாடு வசதி கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

இடுகாடு வசதி கேட்டு இஸ்லாமிய பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.

HIGHLIGHTS

இடுகாடு வசதி கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
X

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புதுமோட்டூரைச் சேர்ந்த இஸ்லாமிய பொதுமக்கள், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், கூறப்பட்டுள்ளதாவது:

புதுமோட்டூர், செட்டியூர், பனங்காட்டூர், பந்தாரவள்ளி, முதுகாம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு அடிப்படை தேவையான இடுகாடு இல்லாத காரணத்தால், 4 கி.மீ. தொலைவில் உள்ள புலியூருக்கு நடந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.

ஆனாலும், அந்த கிராமத்திலும் ஒருசில நேரங்களில் அடக்கம் செய்ய மறுக்கின்றனர். எனவே, புதுமோட்டூரில் பெரும்பாலான குடும்பங்கள் வசித்து வரும் சூழலில், இங்கு இடுகாடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Jun 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்