Begin typing your search above and press return to search.
இடுகாடு வசதி கேட்டு கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
இடுகாடு வசதி கேட்டு இஸ்லாமிய பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புதுமோட்டூரைச் சேர்ந்த இஸ்லாமிய பொதுமக்கள், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், கூறப்பட்டுள்ளதாவது:
புதுமோட்டூர், செட்டியூர், பனங்காட்டூர், பந்தாரவள்ளி, முதுகாம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு அடிப்படை தேவையான இடுகாடு இல்லாத காரணத்தால், 4 கி.மீ. தொலைவில் உள்ள புலியூருக்கு நடந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.
ஆனாலும், அந்த கிராமத்திலும் ஒருசில நேரங்களில் அடக்கம் செய்ய மறுக்கின்றனர். எனவே, புதுமோட்டூரில் பெரும்பாலான குடும்பங்கள் வசித்து வரும் சூழலில், இங்கு இடுகாடு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.