/* */

ஜூலை 26ம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்

கிருஷ்ணகிரியில், வரும் 26ம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஜூலை 26ம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம்
X

இது குறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 26,ம் தேதி காலை 10,மணியளவில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.

ஓய்வூதியர்கள், தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை தபால் உறையின் மீது எழுதி, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி - 635001 என்ற விலாசத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஓய்வூதியக்கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும். நீங்கள் அனுப்பும் புகார்களில், ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழு விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். தங்கள் கடிதம் மேற்கண்ட முகவரிக்கு வருகிற 23ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 10 July 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை